ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் முதலாவதாக என்னை கொலை செய்திருப்பார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்தார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எமது நாட்டு மக்களுக்கு கடந்த கால ஆட்சி வெறுத்திருந்தது. நாட்டை சூறையாடிக் கொண்டு, குடும்ப ஆட்சியை நடத்தி வந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை மக்கள் வெறுத்தமையே அதற்கு காரணமாகும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னுடன் கதைப்பதற்கு பயந்தனர். ஒருவேளை என்னோடு எவராவது கதைத்தால் அடுத்த நாள் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள்.
எனது தொலைபேசி அழைப்புக்கள் இரகசியமாக பதிவு செய்யப்பட்டன.
அன்றை ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. பேருவளையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. அதேபோன்று கிறிஸ்தவ தேவாலயங்களும் தாக்கப்பட்டன.
தமிழ் மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டது. ராஜபக்ஷ சகல தமிழர்களையும் புலிகளாகவே பார்த்தார்.
பேருவளையில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எல்லோரும் அதனை வாசிக்க வேண்டும். நடந்த உண்மை அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்ஷவுக்கு இருந்தது மக்களின் பலம் அல்ல. பொலிஸ் உட்பட படையினரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பலம். மற்றையது மோசடியாக சம்பாதித்த பண பலமாகும்.
ஆயினும் அவரை தோற்கடிப்பதற்கு நாங்கள் மக்கள் பலத்தை ஒன்று திரட்டினோம். நாட்டை காப்பாற்றுவதற்காகவே நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்று சேர்ந்தோம்.
மஹிந்த ராஜபக்ஷ அன்று வெற்றி பெற்றிருந்தால் என்னைத்தான் முதலில் கொலை செய்திருப்பார்.
பாராளுமன்ற உறுப்பினர்களில் உயர்தர வகுப்பில் சித்தியடைந்தவர்கள் 50 சத வீதம் கூட கிடையாது. பட்டம் பெற்றவர்கள் 10 சத வீதம் கூட இல்லை. சிலர் தம்மை சட்டத் தரணிகளாக கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் சட்டம் படித்து பட்டம் பெற்றவர்கள் அல்லர். டிப்ளோமா பெற்றவர்களாவர்.
இன்று சுதந்தரம், மனித உரிமைகள் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன. நாங்கள் மக்களுக்கு ஜனநாயக்தையும் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளோம். ஊடக சுதந்திரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM