சீனாவின் சோங்கிவிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் விமானம் தீ பிடித்து விபத்துக்குள்ளானது.
Photo ; Twitter
விமானத்தில் இருந்த 113 பயணிகள் மற்றும் 9 விமான பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் சோங்கிவிங் ஜியங்பெய் சர்வதேச விமான நிலையத்தில் திபெத்திய எயார்லைன் நிறுனத்தை சேர்ந்த #TV8933 என்ற விமானம் இன்று காலை 8 மணி அளவில் புறப்படுவதற்காக விமான ஓடுதளத்தில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது.
Photo ; Reuter
உடனடியாக விமானத்தில் இருந்த 113 பயணிகள், 9 விமானப் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக எவருக்கும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விமான ஓடுதளத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படை வாகனங்கள் உடனடியாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் ஒருசிலருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஓடுபாதையை விட்டு விமானம் விலகியதால் தீப்பிடித்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீப்பிடித்த விமானம் சோங்கிவிங் ஜியங்பெய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாசாவிற்கு புறப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM