(நா.தனுஜா)
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் நாட்டுமக்கள் அனைவரும் அமைதியாகவும் நிதானமாகவும் செயற்படவேண்டியது அவசியமாகும். குறிப்பாக வன்முறைகளால் நாடு அழிவையே சந்திக்கும் என்பதை மக்கள் மனதிலிருத்திக்கொள்ளவேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத்தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று தோற்றம் பெற்றுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் மக்களை அமைதிகாக்குமாறு வலியுறுத்தி வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரால் அமைதிவழிப்போராட்டக்காரர்கள்மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும்.
அதேவேளை வன்முறைகளால் நாடு அழிவையே சந்திக்கும் என்பதையும் மனதில்கொள்ளவேண்டும். கடந்த பல தசாப்த காலங்களாக நாடு இத்தகைய அழிவையே எதிர்கொண்டு வந்தது என்பதையும் நினைவுறுத்துகின்றேன்.
எனவே தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் நாட்டுமக்கள் அனைவரும் அமைதியாகவும் நிதானமாகவும் செயற்படவேண்டியது அவசியமாகும்.
அதேவேளை ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காகப் போராடும் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்திய ராஜபக்ஷ குழுவினர் ஒருபோதும் தப்பிக்கமுடியாது என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM