(எம்.எப்.எம்.பஸீர்)
காலி - ரத்கம பகுதியிலும், அங்கொடை பகுதியிலும் இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இன்று ( 10) மாலை பதிவாகின. இதன்போது 5 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ரத்கம துப்பாக்கிச் சூடு அந்த பிரதேச சபை தலைவரினாலும், அங்கொடை துப்பாக்கிச் சூடு முல்லேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ரத்கம
ரத்கம பிரதேச சபை தலைவரின் வீட்டின் முன்னால் இன்று மாலை அப்பகுதி மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் முன்னெடுத்துள்ளனர். இதன்போது பிரதேச சபை தலைவர் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதேசத்தின் அமைதியை உறுதி செய்ய பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அங்கொடை
முல்லேரியா, அங்கொடை சந்தியில் இன்று மாலை முல்லேரியா பொலிஸ் பொறுப்பதிகாரி பயணி ஜீப் வண்டி மீது தாக்குதல் நடாத்தி தீ வைக்க முயன்றவர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அம்பதலே எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே நேற்று (9) தாக்குதல் நடாத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ள பஸ் வண்டி ஒன்றினை இராணுவத்தினர் பாதையிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன் போது பிரதேச மக்கள் அந்த பஸ் வண்டியை பெற்றோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் இராணுவத்தினர் முல்லேரிய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து முல்லேரிய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுனிமல் சுசந்த உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்கு சென்ற போது , அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடாத்தி ஜீப் வண்டிக்கு தீ வைக்க தயாரான போது துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM