(இராஜதுரை ஹஷான்)
நாட்டின் தற்போதைய ஸ்தீரமற்ற நிலைமைக்கு பாராளுமன்றத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும்.பாராளுமன்றத்தை கூட்டி அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தீர்க்கமான தீர்மானங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமர்று சபாநாயகர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் ஸ்தீரமற்ற தன்மைக்கு தீர்வு காணும் பொருட்டு நாளை பிற்பகல் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில் விசேட கட்சி தலைவர் கூட்டம் இடம்பெறவுள்ளது.
காலி முகத்திடல் 'கோட்டா கோ கம' ஆர்பாட்ட களத்தில் மீது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் முன்னெடுத்த மிலேட்சத்தனதான தாக்குதலை தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன.
உத்தேச இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபி;ப்பது குறித்து அவதானம் செலுத்தி அரசியலமைப்பிற்கமைய அடுத்தக்கட்ட நகர்வினை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தி நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்.
நாட்டில் தற்போது அரசியல் ஸ்தீரமற்ற தன்மை தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பதொன்று கிடையாது.இவ்வாறான பின்னணியில் பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினர் கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றில் ஒன்றினைந்து எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சபாநாயகர் பாராளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
நாட்டில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதை தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்டி விரைவாக தீர்வு காண்பதற்கும்,அரசியல் ரீதியில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து உரிய தீர்மானத்தை மேற்கொள்ளவும் பாராளுமன்றத்தை கூட்டுமாறும்,பிரச்சினைக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறும் சபாநாயகர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் ஸ்தீரமற்ற தன்மை தொடர்பிலும்,முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் சபாநாயகர் தலைமையில் நாளை விசேட கட்சி தலைவர் கூட்டம் இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM