நாடளாவிய ரீதியில் மக்கள் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பில் 'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டங்கள் மீது நேற்றையதினம் பொதுஜனபெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இவ்வாறு கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற அமைதியான மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தாக்குதலை மேற்கொண்ட நிலையில், நாடளாவிய ரீதியில் வன்முறைகள் தோற்றம் பெற்றது.
இதையடுத்து மக்கள் பொதுஜனபெரமுனவின் அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை தாக்கி அழித்ததுடன் அவற்றுக்கு தீ வைத்து அழித்தனர்.
இந்நிலையில் குறித்த அரசியல்வாதிகளில் எவராவது நாட்டைவிட்டு தப்பிச்சென்று விடாமல் தடுக்க பொதுமக்கள் வீதிகளில் இறங்கி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேக வீதி மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்லும் வீதிகள் போன்றவற்றில் மக்கள் இவ்வாறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM