அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க வீதிகளில் பொதுமக்கள் சோதனை !

Published By: Digital Desk 3

10 May, 2022 | 02:11 PM
image

நாடளாவிய ரீதியில் மக்கள் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பில் 'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டங்கள் மீது நேற்றையதினம் பொதுஜனபெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்டனர்.

இதில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இவ்வாறு கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற அமைதியான மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தாக்குதலை மேற்கொண்ட நிலையில், நாடளாவிய ரீதியில் வன்முறைகள் தோற்றம் பெற்றது.

இதையடுத்து மக்கள் பொதுஜனபெரமுனவின் அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை தாக்கி அழித்ததுடன் அவற்றுக்கு தீ வைத்து அழித்தனர்.

இந்நிலையில் குறித்த அரசியல்வாதிகளில் எவராவது நாட்டைவிட்டு தப்பிச்சென்று விடாமல் தடுக்க பொதுமக்கள் வீதிகளில் இறங்கி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேக வீதி மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்லும் வீதிகள் போன்றவற்றில் மக்கள் இவ்வாறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51