(என்.வீ.ஏ.)
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவிருந்த 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ள சரியான திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், சுப்பர் லீக்குடன் தொடர்பு படாததால் அதனை இரத்து செய்ய தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (எஸ்.எல்.சி.) தெரிவித்தது,
எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தில் 3 போட்டிகள் கொண்ட தொடர் இணைக்கபட்டிருந்தது.
ஆனால், இந்த வருட இறுதிப் பகுதியில் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவிருப்பதால் அதற்கு முன்னர் வீரர்கள் அதிர்ச்சிக்குள்ளாகலாம் என்பது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் கவலை கொண்டுள்ளது.
மேலும் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மூவகை கிரிக்கெட் தொடர்கள் ஜூன் மாதம் இங்கு நடைபெறவுள்ளதாலும் ஆகஸ்ட் மாதம் அளவில் லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளும் செப்டெம்பர் மாதத்தில் ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவுள்ளதாலும் பாகிஸ்தானுடான ஒருநாள் தொடரை ரத்து செய்வதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
இலங்கையும் பாகிஸ்தானும் கடைசியாக டெஸ்ட் தொடரில் 2019இல் விளையாடின. லாகூரில் 2009ஆம் ஆண்டு இலங்கை அணியினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர அதுவாகும்.
இது இவ்வாறிருக்க இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM