( எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு, காலிமுகத்திடலை அண்மித்து 'கோட்டா கோ கம', 'மைனா கோ கம' அமைதிப்போராட்டங்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவு வன்முறைக் கும்பல் நடாத்திய மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றநிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசசபை, நகரசபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் வீடுகள் மீது நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு சென்று தாக்குதல் நடாத்தி வரும் நிலையில், நிலைமை மோசமடைந்துள்ளது.
இந் நிலையில் ராஜினாமா செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான குருணாகலில் உள்ள வீடு ஆர்ப்பாட்டக் காரர்களால் முற்றாக இன்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்டது.
ஏற்கனவே ரஜபக்ஷக்களின் மெதமுலனையில் உள்ள பரம்பரை வீடும், டி.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த தூபி உள்ளிட்ட நூதனசாலையும் தகர்க்கப்பட்ட பின்னணியில் குருணாகல் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதனைவிட, அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின், ஹோகந்தர பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதனைவிட முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் இல்லம், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கண்டி இல்லம் ஆகியனவும் ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன் அவ்வீடுகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM