(செய்திப்பிரிவு)
அவசர கால சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த டுவிட்டர் பதிவில் , ' அவசர கால சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியே வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
வெள்ளியன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதி சபாநாயகர் தெரிவிற்கான வாக்கெடுப்பினைப் பொறுத்த வரையில் அன்றைய தினம் சுமார் 5 - 10 மில்லியன் மக்களின் வரிப்பணம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு எடுத்த நிலைப்பாட்டில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் ஸ்திரமாகவுள்ளது.
நாம் சுயாதீனமாகச் செயற்படுவது மக்களுக்கான முடிவை எடுப்பதற்காகும். நாம் மனசாட்சியின் பிரகாரம் செயற்பட்டுள்ளோம்.' என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM