சமையல் எரிவாயுவை வழங்குமாறு கோரி கொழும்பு ஆமர் வீதியில் தொடரும் ஆர்ப்பாட்டம் 

07 May, 2022 | 08:34 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த இரு வாரங்களுக்கும் அதிகமாக வீட்டு பாவனைக்கான சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

எனினும் நாளாந்தம் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்த மக்கள் இன்றையதினம் நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். குறித்த போராட்டம் தற்போதும் இடம்பெற்று வருகின்றது.

அதற்கமைய கொழும்பு - 14 , ஆமர்வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் இன்று காலை முதல் அப்பகுதியூடான சகல போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதமடைந்தன.

ஆமர் வீதியூடாக கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை, புறக்கோட்டை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வீதிகள் முழுமையாக மறிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வீதிகளில் எரிவாயு சிலிண்டர்களை வைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் போது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டமையால் அங்கு அமைதியற்ற நிலைமையும் ஏற்பட்டது. 

பின்னர் ஆமர்வீதி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து எரிவாயுவைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

இதே போன்று பெலவத்த சந்தியில் எரிவாயுவிற்காக காத்திருந்த மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் பத்தரமுல்ல - கொட்டாவ மற்றும் கொட்டாவ - பொரளை ஆகிய வீதிகளுடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 மேலும் மகாபாகே பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு - நீர்கொழும்கு வீதியூடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன. 

Image

Image

Image

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51