சுயாதீன குழுக்களின் தலைமையில் இடைக்கால அரசு - வீரசுமன வீரசிங்க

Published By: Digital Desk 5

07 May, 2022 | 09:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் சாதகமான தீர்மானத்தை எதிர்வரும் வாரத்திற்குள் முன்னெடுக்காவிடின் சுயாதீன குழுக்களின் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும்.

Weerasumana Weerasinghe to serve as Acting Chairman of Communist Party upon  Collure's dismissal - News site for Tamils

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் வாரம் பதவி நீக்கப்படலாம் அல்லது அவர் பதவி விலகலாம் என அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இடைக்கால அரசாங்கத்திற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளது.

சர்வ கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் நாளை அல்லது நாளை மறுதினம் பிரதான எதிர்க்கட்சிகளுடன் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

சாதகமான பதில் கிடைக்காவிடின் அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 39 பேரையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்படும்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பிரதமரின் பதவி விலகல்,இடைக்கால அரசாங்கம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

 எதிர்வரும் வாரம் பிரதமர் பதவி விலக்கப்படலாம் அல்லது அவர் பதவி விலக நேரிடலாம்.

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைகிறது. ஜனாதிபதி,பிரதமர் பாதுகாப்பாகவே உள்ளார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீதிக்கிறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து விரைவாக பொதுத்தேர்தலை நடத்துவது அவசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55