ஜப்பானிய வர்த்தக நிறுவனமான மிட்சுயி இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் ஊடாக நிலையான 24 மணிநேர மின் விநியோகத்தை உறுதி செய்யும்.
சூரியன் அல்லது காற்றாலை மின்சக்திக்கு உகந்த பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வானிலை தொடர்பான செயலிழப்புகளின் அபாயம் குறைக்கப்படும்.
காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் ஏராளமாக உள்ளன. மிட்சுய் நிறுவனம் இந்தியாவில் ஒரு விரிவான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்தில் முதலீடு செய்துள்ளது.
இத்திட்டத்தில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தலா ஒரு காற்றாலை, ராஜஸ்தானில் சோலார்-பிளஸ்-பேட்டரி-சேமிப்பு பண்ணை ஆகியவை உள்ளடங்கியதாக இந்த திட்டம் அமையும் என மிட்சுயின் திட்ட தலைமையகத்தின் பிரதிநிதி தகேஷி அசானோ தெரிவித்துள்ளார்.
400 மெகாவாட் மின்சாரத்தை 24 மணி நேர விநியோகத்திற்கான 25 வருட கொள்முதல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான சோலார் எனர்ஜி கார்ப்பரேசன் மிட்சுயின் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மிட்சுயின் கூற்றுப்படி, இதுவே இந்தியாவில் முதல் 'சுழற்சி' திட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM