நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நுவரெலியாவிலும் அரசுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு பதவி விலக கோரியும்,தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் , பெரும் போகத்திற்கு தேவையான இரசாயன உரம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான ஏனைய இரசாயன திரவியங்களை பெற்றுதருமாறு கோரியும் பல நகரங்களில் இன்றும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதற்கு ஆதரவாக நுவரெலியாவில் மதகுருமார்கள், நகரசபை ஊழியர்கள் , நுவரெலியா பொது மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் ,அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
போராட்ட பேரணியானது நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உள்ள "கோட்டா ? கோகம" இல் ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா பிரதான வீதியினூடாக நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக அரசுக்கு எதிராக எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டு, பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM