பாராளுமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டதால்  சபையில் கடும் அமளி துமளி ; சபாநாயகரை வீட்டுக்காவலில் வைக்க நேரும் என  எச்சரிக்கை

Published By: Digital Desk 4

06 May, 2022 | 07:16 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்துக்கு வெளியில் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்  மக்களை , பாதுகாப்பு பிரிவினர் கடுமையாக தாக்குவதாகவும் அது தொடர்பில் சபாநாயகர் சபைக்கு வந்து பதிலளிக்கவேண்டும் எனவும்  ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபையில் ஆவேசத்துடன் தெரிவித்ததையடுத்து  சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது . 

பாராளுமன்ற அமர்வுக்கு முன் அமைச்சரவையில் மாற்றம் -பறிபோகும் நிலையில்  மாற்றுக்கொள்கையாளர்களின் பதவிகள் | Virakesari.lk

அத்துடன் சபாநாகருக்கு சபைக்கு வர முடியாவிட்டால் சபையை ஒத்திவைக்கவேண்டும் என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபை நடுவில் வந்தததால் சபையை கட்டுப்படுத்த முடியாமல் சபைக்கு தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹேஷா விதானகே சபையை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. காலை முதல் சபை நடவடிக்கைகள் அமைதியாக இடம்பெற்ற நிலையில் மாலை 3 மணியளவில் விவாதத்தில் உரையாற்ற ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி யின் பெயர் அழைக்கப்பட்டது.

இதன்போது அவர், விவாதத்தில் உரையாற்ற நேரம் வழங்கப்பட்டாலும் தற்போது உரையாற்று முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஏனெனில் வெளியில் அமைதியாக போராடும் மாணவர்கள் மீது  பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துக்கின்றனர். அதனை உடனடியாக நிறுத்துமாறு சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும் என்றார் 

அத்துடன்   சபாநாயகரை உடனடியாக சபைக்கு வருமாறு அறிவித்தல் வழங்க வேண்டும் என்றார். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலவரும் சூழ்ந்துகொண்டு சபாநாயகரை உடனடியாக வரவழைக்கவேண்டும் என குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹேஷா விதானகே, சபாநாயரை வருமாறு அழைப்பு விடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. என்றாலும் இதுதொடர்பில் செயலாளர் ஊடாக அறிவுறுத்துகிறேன் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த புத்திக்க பத்திரண, வெளியில் போராடும் இளைஞர்கள் மீது  கண்ணீர் புகை மற்றும் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை சமூக வலைத்தளங்கள்  நேரலையாக ஒளிப்பரப்புகின்றன.

இந்த நிலை தொடர்ந்தால் பாராளுமன்றத்தையும் போராட்டக்காரர்கள் நொருக்குவார்கள். அதனால் சபாநாயகருக்கு உடனடியாக வரசொல்லுங்கள். இதற்கு பொறுப்புகுகூறவேண்டிய அமைச்சர்கள் யாரும் சபையில் இல்லை என்றார்.

அதனைத்தொடர்ந்து ஹரின் பெர்ணான்டோ குறிப்பிடுகையில், சபாநாயகர் இந்த இடத்துக்கு வராவிட்டால், அவரை வீட்டுக்காவலில் வைப்போம்.சபாநாயகரை இன்று வீட்டுக்கு அனுப்பப்போவதில்லை.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு திகதி குறிப்பிடாவிட்டால்  போராட்டக்காரர்களை பாராளுமன்றத்து அழைத்து வருவோம் என்றார்.

அதனைத்தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய குறிப்பிடுகையில், சபைக்கு தலைமை தாங்கும் உறுப்பினருக்கு தீர்மானம் ஒன்றை எடுக்கலாம். அதனால் நீங்கள் அனைவரும் நாடகம் ஆடாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துக்கொண்டிருக்கையில், 

 எதிர்க்கட்சி எம்.பி.க்களான ஹரின் பெர்னாண்டோ .மனுஷ நாணயக்கார , சமிந்த விஜேசிறி  ஆகியோர் கூச்சலிட்டவாறு சபைக்கு நடுவே இறங்கி செங்கோலை தூக்க முற்பட்டபோது ஓடிவந்த படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ வும், உதவி  படைக்கல சேவிதர்களும் செங்கோலை பாதுகாக்க முற்பட்டனர்.

இதன்போது ஏற்பட்ட இழுபறியில்  படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கீழே  விழுந்து விட்டார். எனினும் மீண்டும் எழுந்த அவர் செங்கோலை பாதுகாக்க தொடர்ந்தும் முயற்சித்த நிலையில் மீண்டும் கீழே விழுந்தார்.

இந்த நிலைமையையடுத்து அப்போது சபைக்கு தலைமை தாங்கி கொண்டிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்து மாலை 3 மணியளவில் சபையை ஒத்திவைத்தார்.

சபையை ஒத்திவைத்து ஹேஷா விதானகே சபாநாயகரின் அறைக்கு செல்லும்போது ஹரின் பெர்னாண்டோ மற்றும் சிலரும் கோபாவேஷத்துடன் சபாநாயகரின் அறையை நோக்கி  சென்றனர்.

இவ்வாறான சூழலில்  சபை   மீண்டும் 3.30 மணிக்கு கூடிய நிலையில் சபைக்கு வந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன , இன்று (வெள்ளிக்கிழமை ) சபையில் நடந்த சம்பவங்கள்  தொடர்பில் திங்கட்கிழமை கூடும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படும். வெளியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் எனது கவலையை தெரிவிக்கின்றேன். அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு போராட்டக்காரர்களை கோருகின்றேன். 

பாராளுமன்றத்துக்கு வெளியே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை ஒரு வாரத்தில்  சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிகின்றேன். வெளியில் இடம்பெறும் சம்பவத்தை சபைக்கு தெரியப்படுத்தியமைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். அத்துடன் சபையை எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10 மணிவரை ஒத்திவைக்கின்றேன் என அறிவித்து விட்டு எழுந்தார்.

அப்போது சபையை ஒத்திவைக்க வேண்டாமென எதிர்க்கட்சியினர் கூச்சலிட்ட போதும் சபாநாயகர்  எதனையும் காதில் வாங்கிக் கொள்ளாது சென்றுவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08