விவசாயிகளுக்கு இழைத்த அநீதியின் சாபத்தை அரசாங்கம் தற்போது அனுபவிக்கிறது - மஹிந்த அமரவீர

Published By: Digital Desk 5

07 May, 2022 | 09:38 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம் இராஜதுரை ஹஷான்)

பிரதி சபாநாயகர் தெரிவுக்கு ஆளும் தரப்பினர்  ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கவில்லை,அவர்களின் ஒத்துழைப்பையும் கோரவில்லை.

அரச பணியாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படக்கூடாது அமைச்சர் மஹிந்த அமரவீர -  News View

அரசாங்கத்தின் பயணம் தவறு என்பதால் அரசாங்கத்திலிருந்து விலகி உண்மை தன்மையுடன் சுயாதீனமாக செயல்படுகிறோம்

விவசாயிகளுக்கு இழைத்த அநீதியின் சாபத்தை அரசாங்கம் தற்போது அனுபவிக்கிறது என மஹிந்த அமரவீர சபையில்   தெரிவித்தார் 

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை(6) சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்க்கட்சியின் சார்பில் பிரதிசபாநாயகரை தெரிவு செய்யவே முயற்சித்தோம்.சுயாதீன தரப்பினரது பரிந்துரைக்கு ஆளும் தரப்பினர் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கவில்லை.

ஆளும் தரப்பினரது ஒத்துழைப்பை கோரவுமில்லை.பெரும்பான்மை பலம் தொடர்பில் கேள்வி நிலைமை தோற்றம் பெறும் என்ற காரணத்தினால் ஆளும் தரப்பினர் இறுதி தருணத்தில் எமக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்கள்.

அரசாங்கத்தின் பயணம் முற்றிலும் தவறு என்ற காரணத்தினால் அரசாங்கத்திலிருந்து விலகி உண்மை தன்மையுடன் எதிர்தரப்பினர் அமர்ந்து சுயாதீனமான முறையில் செயல்படுகின்றனர் .

அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது.அரசாங்கத்தின் தவறுகளை பகிரங்கமான முறையில் சுட்டிக்காட்டுகிறோம்.

225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் வெறுக்கிறார்கள்.கடந்த காலங்களிலும் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை இவ்வாறு வெறுத்தார்கள்,விமர்சித்தார்கள்.

இடம்பெற்று முடிந்த பொதுத்தேர்தலில் முன்னரை விடவும் மோசடியானர்கள்,குற்றவாளிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

தற்போது போராட்டத்தில் ஈடுப்படுபவர்களில்  குறைந்தது 25 பேராவது எதிர்வரும் பொதுத்தேர்தல் ஊடாக பாராளுமன்றிற்கு தெரிவாகுவார்கள்.

விவசாயிகளுக்கு இழைத்த அநீதியின் விளைவை அரசாங்கம் தற்போது அனுபவிக்கிறது.

நாடு தற்போது பாரிய நெருக்கடியினை எதிர் கொண்டுள்ளது,நெருக்கடி நிலையில் இருந்து மீள சகல தரப்பினரும் பொறுப்புடன் செயல்படுவது அவசியமானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58