நாட்டின் வடக்கு தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் அடுத்து வரும் நாட்களில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொஹமட் சாலி தெரிவித்தார்.
இதனடிப்படையில் அதிகளவிலான மழை வீழ்ச்சி மேல் மாகாணத்தில் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய காலநிலையின் பிரகாரம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடி மின்னல் தாக்கம் அதிகளவில் காணப்படும் என்பதனால் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் வடக்கு தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் அடுத்து வரும் நாட்களில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகும். இலங்கையில் இருந்து வட கிழக்கு வரை நிலை கொண்டுள்ள குறித்த தாழமுக்கம் 1500 கிலோ மீட்டர் தொலைவில் வீசக்கூடும். தற்போதைய நிலையில் நாட்டில் பருவ பெயர்ச்சி மழை பெய்ய ஆரம்பித்திருக்கின்றது. இதனடிப்படையில் எதிர்வரும் தினங்களில் அதிகளவிலான மழை வீழ்ச்சியினை எதிர்பார்க்கலாம். அதிலும் மேல் மற்றும் வடக்கு, தெற்கு மாகாணங்களில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகும்.
மேலும் சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அதிகளவிலான மழை வீழ்ச்சி பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுகின்றன. மேலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும். எனவே மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீன் பிடி தொழில் உள்ளிட்ட கடற் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அவதானமாக செயற்படுவது மட்டுமல்லாது கடலுக்கு செல்வதனையும் தவிர்த்துக் கொள்வது சிறந்தது.
மேலும் மேற்குறிப்பிட்ட மேல், வடக்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 02 மணி தொடக்கம் குறித்த மழை வீழ்ச்சி பதிவாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM