பொலனறுவை மாவட்டம் வெலிகந்த - கடவத்தமடு பகுதியில் கொழும்பு பிரதான வீதியில் லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வெலிகந்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை கொழும்பில் இருந்து காத்தான்குடியை நோக்கி செல்லும்போது வெலிகந்த - கடவத்தமடு எனும் இடத்தில் லொறியின் முன்பக்க சில்லு ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டையும் இழந்த நிலையில் பிரதான பாதையில் இருந்து சற்று விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
அருகில் உள்ள கிராம வாசிகளும் பாதையால் பயணித்தவர்களும் இணைந்து விபத்துக்குள்ளான லொறியில் இருந்து சாரதியையும் உதவியாளரையும் மீட்டுள்ளனர்.
அதில் லொறியின் சாரதியான காத்தான்குடி முஹம்மது அஜ்மல் என்பவரே காயமடைந்த நிலையில் உடனடியாக வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள எம்.ஐ.எம் ஸ்டோர்ஸ்க்கு சொந்தமான லொறி சீனி கொள்வனவு மேற்கொண்டு வரும்போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து தொடர்பான விசாரணையை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
-அப்துல் கையூம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM