(செ.திவாகரன்)
உடபுசல்லாவையைச் சேர்ந்த நடை வீரரான மணிவேல் சத்தியசீலன் கடந்த சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் இராகலையில் இருந்து கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்தார்.
அவர், நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்னைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் , உரப்பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, எரிவாயு மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் இராகலை முருகன் ஆலயத்தில் மத வழிபாடுகளின் பின்னர் நுவரெலியா, ஹட்டன், கினிகத்தனை, அவிசாவளை வழியாக கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள "கோட்டா கோகம" வை நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்தார்.
இவரின் நடைபயணத்தில் பிரதான நகரங்களில் மக்கள் அமோக வரவேற்பு வழங்கி உற்சாகப்படுத்தினார்கள்.
இவ்நடைபயணத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஹட்டனிலிருந்து அவிசாவளை வரை தனது பயணத்தை ஆரம்பித்து திங்கட்கிழமையான நேற்று மாலை 5:10 மணியளவில் சத்தியசிலன் கொழும்பு காலிமுகத்திடக்கு சென்று எதிர்ப்பினை வெளிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM