கொழும்பில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மைனா கோ கம போராட்ட களத்துக்குள் மர்ம பெண் ஒருவர் உள் நுழைந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
அலரிமாளிகைக்கு முன்பாக 8 ஆவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில், ஒரு சில இளைஞர்கள் ஐந்து நாட்களாக உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த இளைஞர்களை இருந்த இடத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர் அங்கிருந்தவர்களை உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் உணவை உண்ணுமாறும் கோரியுள்ளார்.
இதனை அவதானித்த போராட்டக்காரர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு கோரியுள்ளனர்.
மீண்டும் மீண்டும் அந்த உண்ணாவிரதத்தில் இருந்தவர்களை உணவை உண்ணுமாறு கோரிய போது, உண்ணாவிரரத்தில் இருந்த இளைஞர்களும் அந்த பெண்ணை திட்டி அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்து குறித்தப் பெண் அகன்று சென்றுள்ளார்.
இந்த பெண்ணை நாம் பின்தொடர்ந்து சென்ற போது அவர் காலிமுகத்திடல் பகுதியில் இருந்து பொலிஸார் சிலருடனும் இனந்தெரியாத நபர்கள் சிலருடனும் மகிழ்ந்து கதைத்து சந்தோசமாக காணப்பட்டார்.
இதுதொடர்பான காட்சிகள் எமது இரகசிய கமராவில் பதிவாகியிருந்தன.
இந்தப் பெண் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டவர்ளை சாப்பிடுமாறு வலியுத்தியது ஏன் ?
இந்த பெண்ணுடன் சிரித்து பேசும் இனந்தெரியாத நபர்கள் யார் ?
பொலிஸாருக்கும் இந்தப் பெண்ணுக்குமான தொடர்பு என்ன ?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM