(என்.வீ.ஏ.)
அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழல்பந்துவீச்சு மன்னன் ஷேன் வோர்னுக்கு ராஜஸ்தான் றோயல்ஸ், மும்பை இண்டியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளினதும் வீரர்களும் போட்டி மத்தியஸ்தர்களும் கௌரவஞ்சலி செலுத்தினர்.
ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கும், மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் இடையில் மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் மறைந்த ஷேன் வோர்னுக்கு ஒரு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டு கௌரவஞ்சலி செலுத்தப்பட்டது.
தாய்லாந்தின் கோஹ் சமுய் தாய் ரிசோர்ட் ஹொட்டெல் ஒன்றில் கடந்த மாதம் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஷேன் வோர்ன் காலமானார். இறந்தபோது அவருக்கு வயது 52.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட்களால் வெற்றிகொண்டு சம்பியனான ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு ஷேன் வோர்ன் தலைமை தாங்கியதுடன் அணி பயிற்றுநராகவும் செயற்பட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM