கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

01 May, 2022 | 12:40 PM
image

கண்டி - ரங்கல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மூவர் மீகொடை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதி  மீகொடை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் திட்டமிட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்தநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 22 மற்றும் 24 வயதான ஓவிட்டிகம யட்டபாத பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் மோட்டார்சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.   குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33