(ஆர்.ராம்)
பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் கு.அண்ணாமலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
நான்கு நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள அவரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட உப தலைவர் திருக்கேஸ் செல்லசாமி மற்றும் அரசியல் அமைப்பாளர்களான ரகு, கோபி ஆகியோர் தலைமையிலான குழுவினர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அவர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பினை நிறைவு செய்து கொண்டு கொட்டக்கலைக்குச் சென்றுள்ளார்.
அங்கு மலையகத்தின் களநிலைமைகளை பார்வையிடவுள்ளதோடு, இன்றைய தினம், இ.தொ.க.வின் வரையறுக்கப்பட்ட மேதின நிகழ்வில் சிறப்புரை ஆற்றுகின்றார்.
பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் பிரதி தவிசாளர் ராஜதுரை, இ.தொ.கா உப தலைவர் பிலிப் குமார், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜா மற்றும் நுவரெலியா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை தலைவர்கள், உறுப்பினர் உட்பட இ.தொ.காவின் அரசியல் அமைப்பாளர்கள் ஆகியோர் நுவரெலியாவில் வரவேற்றனர்.
தொடாந்து, நாளை திங்கட்கிழமை வடக்கிற்குச் செல்லும் அவர் நல்லூருக்குச் செல்லவுள்ளதோடு வடமாகாணத்தின் களநிலைமைகளையும் நேரில் அவதானிக்கவுள்ளார்.
பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட வடக்கின் அரசியல் தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM