மட்டக்களப்பில் விடுதியொன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் என்பவர் விடுதி உரிமையாளர் என்ற வகையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் இல்லத்தோடு இணைந்தாற்போல் குறித்த விடுதி நடத்தப்பட்டு வந்துள்ளது.
குறித்த விடுதியில் விபசார நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மட்டக்களப்பு பொலிஸார் இன்று காலை இவ் விடுதியை முற்றுகையிட்டு சோதனை நடாத்தியுள்ளனர்.
இதன்போது அங்கு விபசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட இந்த விடுதியின் உரிமையாளரான மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் அடங்கலாக 7 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடுதியிலிருந்து கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் கண்ணங்குடா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட ஆண்களில் ஒருவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனவும் ஏனையவர்கள் மட்டக்களப்பு பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.
இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
- சசி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM