மட்டக்களப்பு இசை நடன கல்லூரிக்கு முன்பாக மாணவர்கள் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் குறித்த பகுதியில் மாணவர்களினால் தங்களது மாணவர் சங்கம் அமைப்பதற்கான கூட்டம் நடைபெற்றதாகவும் அந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த விரிவுரையாளர் ஒருவர் குறித்த கூட்டத்தை நடத்த வேண்டாம் என கூறியதாகவும் அதனால் அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது குறித்த விரிவுரையாளர் மாணவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதல் காரணமாக இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக தற்பொழுது விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தினை மூடி குறித்த நிர்வாகத்திலிருந்து விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பணிப்பாளர் ஆகியோர் வெளியேற முடியாதவாறு தற்பொழுது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. காத்தான்குடி பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் அது பயனளிக்கவில்லை.
தாக்கியவர்களை கைது செய்யும் வரைக்கும் யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்று கூறி குறித்த பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM