(எம்.எம்.சில்வெஸ்டர்)
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அடைந்த தோல்வியானது, ஐ.பி.எல். அரங்கில் பந்துவீச்சாளரொருவர் 5 அல்லது 5 இற்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை சாய்த்தும் தோல்வியைத் தழுவிய 8 ஆவது சந்தர்ப்பமாக பதிவானது.
15 ஆவது ஐ.பி.எல். போட்டித் தொடரின் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அணி குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு கட்டத்தில் தோல்வியடைந்துவிடும் என்ற நிலையில் இருந்தபோது ரஷீட் கான், ராகுல் திவாட்டியா ஜோடி அதிரடியாக துடுப்பெடுத்தாடி இறுதிப்பந்தில் அதிர்ச்சிகரமான வெற்றியை ஈட்டியது.
அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களை குவித்து 4 விக்கெட்டுகளால் வெற்றி அடைந்தது.
இதில் ஐதராபத் அணியின் உம்ரன் மாலிக் மின்னல் வேகத்தில் பந்துவீசி 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்த போதிலும் தோல்வியைத் தழுவியது.
இவ்வாறு ஐ.பி.எல். அரங்கில் பந்துவீச்சாளரொருவர் 5 விக்கெட்டுக்கள் அல்லது அதற்கு மேற்பட் விக்கெட்டுக்களை வீழ்த்தி தோல்வியைத் தழுவிய 8 ஆவது சந்தர்ப்பமாக இந்த தோல்வி அமைந்தது.
இதற்கு முன்னர் 2011 இல் முனாப் பட்டேல், 2012 இல் சுனில் நரைன், 2013 இல் ஜேம்ஸ் போல்க்னர், 2016 இல் அடம் ஸம்பா, 2018 இல் அங்கித் ராஜ்புத், 2021 இல் அண்ட்ரே ரசல் மற்றும் ரசல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை கைப்பற்றியபோதிலும் தத்தமது அணி தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM