மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம் : மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பலி

Published By: MD.Lucias

23 Oct, 2016 | 11:12 AM
image

-அப்துல் கையூம்

மட்டக்களப்பு–கொழும்பு நெடுஞ்சாலையில் சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் நேற்று  சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர்-ஆறுமுகத்தான் குடியிருப்பு காளிகோயில் வீதியைச் சேர்ந்த வி.ரதிதன் (வயது 17) மற்றும் கே.விதுஷன் ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.

நண்பர்களான இவ்விருவரும் மட்டக்களப்பில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பதற்காக ஏறாவூர்-ஆறுமுகத்தான் குடியிருப்பிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியருகே இருந்த பனை மரத்தில் மோதியுள்ளது.

படுகாயங்களுக்குள்ளான இருவரும் வீதியால் சென்றவர்களின் உதவியுடன் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி சற்று நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்துச் குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53