வவுனியா, செட்டிகுளம்- நேரியகுளம் வீதியில் டயர் போட்டு எரித்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (28) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜனாதிபதி, பிரதமர் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி நாடு பூராகவும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (28.04) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையிலேயே வவுனியா, செட்டிகுளம் - நேரியகுளம் வீதியில் உள்ள வீரபுரம் பகுதியில் வீதியில் டயர் போட்டு எரித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பொது வீதிக்கு சேதத்தை ஏற்படுத்தியதாக வீரபுரம் மற்றும் காந்திநகர் ஆகிய பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அவர்களது வாக்கு மூலங்களை பதிவு செய்த பின் எச்சரிக்கப்பட்டு அவர்களை விடுவித்தனர்.
இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் இளைஞர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM