( எம்.எப்.எம்.பஸீர்)
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது, முகத்தை முழுமையாக மறைத்துக்கொண்டு வெள்ளை வேனில் வந்த அடையாளம் தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணைகளை உடனடியாக, சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்குமாறு நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டது. கெஸ்பேவ நீதிவான் தமிந்த ராமநாயக்க வெலிகொடபிட்டிய இதற்கான பொலிஸ் மா அதிபருக்கு பிறப்பித்தார்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பான ஊடகவியலாளர் சமுதித்தவுக்காக நேற்று (27) மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்ஸா முன் வைத்த கோரிக்கையை ஏற்று, இந்த உத்தரவை நீதிவான் பிறப்பித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் தனது சேவை பெறுநருக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை என இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்ஸா சுட்டிக்காட்டியிருந்தார்.
இந் நிலையிலேயே உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான 3 சிறப்புக் குழுக்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளை நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தவிட்டுள்ளது.
முன்னதாக கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி அதிகாலை பிலியந்தலை – கேம்பிரிஜ் கோர்ட் குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் சமுதித்தவின் வீட்டின் மீது கற்கள் மற்றும் மலம் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர்.
சிறிய ரக வெள்ளை வேனில் வந்த நால்வர், குடியிருப்பு தொகுதியின் பிரதான நுழைவாயிலை வலுக்கட்டாயமாக திறந்து அங்கிருந்த பாதுகாப்பு கடமையிலிருந்த ஊழியரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, அவரை பாதுகாப்பு பணிக் கூடத்துக்குள் சிறைப்படுத்தியுள்ளனர்.
அதன்பின்னரே ஊடகவியலாளரின் வீட்டை நோக்கி சென்று இவ்வாறு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM