(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பில் 11 கட்சிகள் உள்ளிட்ட சுயாதீன உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும். நாட்டு மக்களின் நிலைப்பாடு என்ன என்பதை நன்கு அறிந்துள்ள பிரதமர் அது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் குறித்து 11 கட்சிகள் உள்ளிட்ட சுயாதீன உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அந்த சந்திப்பில் கலந்து கொள்வதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். நாம் சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலேயே கலந்துரையாடி வருகின்றோம். இதன் போது பிரதமர் பதவி விலகுவாரா அல்லது அவரை ஜனாதிபதி பதவி விலக்குவாரா என்பது எதிர்காலத்தில் தீர்மானிக்கப்பட வேண்டிய காரணியாகும்.
நாட்டு மக்களின் நிலைப்பாடு என்ன என்பதை பிரதமர் நன்கு அறிவார். எனவே அவர் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். இதே போன்று இந்த அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் பயணிக்க முடியாது.
எனவே தான் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறும் , அதில் அனைவரையும் பங்குபற்றுமாறும் கோருகின்றோம். எந்தவொரு கட்சிக்கும் இதனை தனித்து செய்ய முடியாது.
நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதிலிருந்து விலகுபவர்களை மக்கள் நன்கு அறிவர். எனவே இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பதை விட வேறு மாற்று வழியில்லை. ராஜபக்ஷக்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்பதே தற்போது நாட்டு மக்களின் கோரிக்கையாகவுள்ளது.
அத்தோடு ஜனாதிபதியை பதவி விலக்க வேண்டுமாயின் அதற்கு முன்னெடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் மிக நீண்ட வழிமுறைகளைக் கொண்டதாகும்.
ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணையை சமர்ப்பித்து அதனை நிறைவேற்ற வேண்டும். அதற்கு நீண்ட காலம் செல்லும். எனவே நாட்டை மேலும் பள்ளத்தில் வீழ்த்துவதா அல்லது 21 ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM