(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் காப்பகத்தில், வழக்குப் பொருளாக இருந்த ஹெரோயின் போதைப் பொருளினை கடத்தி விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் மே 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் புதன்கிழமை ( 27) உத்தரவிட்டது.
கொழும்பு மேலதிக நீதிவான் பி.என்.எல். மஹவத்த இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
கொத்தட்டுவை பொலிஸ் நிலையத்தின் வழக்கு நெறிப்படுத்தல் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளாக செயற்பட்ட ரொமேஷ் கிம்ஹான் எனும் சந்தேக நபரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இந் நிலையில் இன்று, இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றுக்கு மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள், இவ்வழக்கின் 2 ஆவது சந்தேக நபராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் வழக்குப் பொருள் காப்பகத்தின் பொறுப்பாளராக செயற்பட்ட கங்கானம்கே கெமுனு சம்பத் என்பவரை பெயரிடுவதாக அறிவித்தனர்.
அதன்படி அவரை தேடி தொடர் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு விசாரணையாளர்கள் கோரினர். அதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றினை முன்னெடுக்க குழுவொன்ரை நியமிக்குமாறும், வழக்குடன் தொடர்புபட்ட ஹெரோயின் எந்த வழக்கு தொடர்பில் வழக்குப் பொருளாக கைப்பற்றப்பட்டது, அது எந்த அதிகாரியின் பொறுப்பின் கீழ் இருந்தது என்பது தொடர்பில் அறிக்கையளிக்க கொழும்பு 2 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றின் பதிவாளருக்கு உத்தரவிடுமாறும் பொலிஸார் கோரினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM