(என்.வீ.ஏ.)
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் 29 ஓட்டங்களால் வெற்றியீட்டி அணிகள் நிலையில் 12 புள்ளிகளுடன் முதலாம் இடத்தை அடைந்துள்ளது.
ரியான் பரக்கின் சிறப்பான துடுப்பாட்டம், குல்தீப் சென் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரின் திறமையான பந்துவீச்சுகள் என்பன ராஜஸ்தான் றோயல்ஸை வெற்றி அடையச் செய்தன.
பெங்களூர் சார்பாக ஜொஷ் ஹேஸ்ல்வுட், வனிந்து ஹசரங்க டி சில்வா, மொஹமத் சிராஜ் ஆகியோர் கட்டுப்பாட்டுடன் பந்துவீசிய போதிலும் துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்காததால் அவ்வணி தோல்வியைத் தழுவியது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.
ஜொஸ் பட்லர் (8), தேவ்தத் படிக்கல் (7), ரவிச்சந்திரன் அஷ்வின் (17), அணித் தலைவர் சஞ்சு செம்சன் (27), டெரில் மிச்செல் (16) ஆகிய ஐவர் ஆட்டமிழக்க 15ஆவது ஓவரில் ராஜஸ்தானின் மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால், ரியான் பரக், தனி ஒருவராக போராடி 31 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்று ராஜஸ்தான் றோயல்ஸ் சுமாரான மொத்த எண்ணிக்கையை பெற உதவினார்.
மத்திய மற்றும் பின்வரிசையில் வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெறவில்லை.
பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வுட் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
145 ஓட்டங்கள் என்று இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ஆரம்ப வீரராக மீண்டும் களம் புகுந்த விராத் கோஹ்லி சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை அணிக்கு தாக்கத்தைக் கொடுத்தது. அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தவண்ணம் இருந்தன.
அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் (23), ரஜாத் பட்டிதார் (16), ஷாபாஸ் அஹ்மத் (17), வனிந்து ஹசரங்க டி சில்வா (18) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
க்ளென் மெக்ஸ்வெல் (0), தினேஷ் கார்த்திக் (6) ஆகிய இருவரும் மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.
பந்துவீச்சில் குல்தீப் சென் 3.3 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ராசித் க்ரிஷ்ணா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM