ரம்புக்கனை  சம்பவம் :  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், பொறுப்பதிகாரியை விசாரிக்க சி.ஐ.டி. சிறப்புக் குழு

Published By: Dinesh Silva

25 Apr, 2022 | 06:09 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்தமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.   

Articles Tagged Under: சி.ஐ.டி | Virakesari.lk

குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின்  125 ஆவது அத்தியாயத்துக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் சந்தன  விக்ரமரத்ன, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவுக்கு  விசாரணைகளை சி.ஐ.டி.யிடம் கையளித்த நிலையில், சி.ஐ.டி. யின் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் அவ்விசாரணைகள் இடம்பெறுகின்றன.

 இந் நிலையில் குறித்த விசாரணைகளில் ஒரு அங்கமாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்த உத்தரவிட்டது யார் என்பதை துல்லியமாக வெளிப்படுத்திக்கொள்ள,  குறித்த சம்பவம் பதிவாகும் போது கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்த அதிகாரியிடமும், ரம்புக்கனை பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்தவரிடமும் விசாரணைகளை முன்னெடுக்க சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த இரு அதிகாரிகளுக்கு மேலதிகமாக ரம்புக்கனை பகுதிக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சரின் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்ளவும் சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

 குறித்த மூன்று அதிகாரிகலும் தற்போது, பொலிஸ்  மேலதிக படை தலைமையகத்துக்கு இடமார்றப்பட்டுள்ள நிலையிலேயே, அவர்களை சி.ஐ.டி. க்கு அழைத்து வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22