(எம்.மனோசித்ரா)
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் தாமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தமக்கான தீர்வினை வழங்குமாறும் வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் காரணமாக இன்றைய தினம் நாட்டிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் ஆசிரியர்கள் வருகை தராமையால் மீண்டும் வீடுகளுக்குச் சென்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தனியார் பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படும் வீதம் குறைவடைந்துள்ளமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, சகல அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்தை வழங்குமாறு கோரி கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் கல்வி அமைச்சின் செயலாளர் குறித்த கடிதத்தினை நிராகரித்தமையின் காரணமாகவே இவ்வாறு சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததாக அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் மக்கள் அரசாங்கத்தை பதவியிலிருந்து விலகுமாறு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், புதிய அமைச்சரவையை நியமித்துக் கொண்டும், கொலை செய்து கொண்டும் அரசாங்கம் முன்னோக்கி பயணிப்பதற்கு முயற்சிக்கிறது. தற்போது இந்த நெருக்கடி பாடசாலை கட்டமைப்பையும் பாதித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
முச்சக்கரவண்டிகளில் சென்றாலும் பாரிய செலவு ஏற்படுகிறது. எனவே இந்த நெருக்கடிகளுக்கு சுமூகமான தீர்வை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் அவர் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. அரசாங்கம் இந்த விடயத்தில் தோல்வியடைந்துள்ளது என்பதை தெளிவாகக் கூறிக் கொள்கின்றோம். எனவே நாட்டு மக்களுடன் இணைந்து அதிபர், ஆசிரியர்கள் விடுக்கும் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் பதவி விலக வேண்டும்.
அவ்வாறில்லை எனில் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அதிபர், ஆசிரியர்களும் இணைந்து பாரியதொரு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM