யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் நேற்று அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும் விபத்தொன்றில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸ் அதிகாரிகள் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து குறித்த 5 பொலிஸ் அதிகாரிகளும் யாழ். நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ச.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் ஐவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, அவர்கள் ஐவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை 24 ஆம் திகதி யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM