பிலிப்பைன்ஸ் நாட்டை சூறையாடிய ‘ஹைமா’ புயலுக்கு 12 இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணங்களை நேற்றுமுன்தினம் மணிக்கு சுமார் 225 கிலோமீற்றர் வேகத்தில் ‘ஹைமா’ என்ற பெரும்புயல் தாக்கியது. புயலை தொடர்ந்து பலத்த மழையும் பெய்ததால் பல இலட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் சோளப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன.
நாட்டின் வடபகுதியில் வாழும் சுமார் ஒருகோடி மக்கள் இந்த புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ளம் சார்ந்த விபத்துகளில் 12 பேர் உயிரிழந்தனர்.
தீவிரம் தணிந்து மணிக்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் அருகாமையில் உள்ள ஹொங்கொங் நகரை நோக்கி நெருங்கிய ‘ஹைமா’ புயல் அங்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்பட்டது. ஆனாலும் தற்போது அதன் வீரியம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM