யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து பக்கச்சார்பற்ற நடவடிக்கைகள் உடன் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வடபகுதி மக்கள் குழப்பமடைய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
யாழ்.நகரை அண்மித்த கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு அருகாமையில் மோட்டார்சைக்கிளில் சென்ற இரு பல்கலைக்கழக மாணவர்கள் விபத்துக்குள்ளாகி மரணமானதாக தெரிவிக்கப்பட்ட போதும் அவர்களது மரணம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருந்தன.
யாழ்ப்பாணத்தில் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த என்னிடத்தில் இவ்விடயம் தொடர்பாக கவனத்தில் கொண்டுவரப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துமாறும் பணித்திருந்தார்.
அதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினேன். அதற்கமைவாக இன்று மாலையளவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலான ஐந்து பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு தற்காலிகமாக பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மரணமடைந்த இரு இளம் பல்கலை மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற வகையில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் தொடர்ந்தும் உரிய முறையில் இடம்பெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதோடு வடபகுதி மக்கள் குழப்பமடையாது இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM