( எம்.எப்.எம்.பஸீர்)
பொது மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகங்களை முன்னெடுக்க, பொலிஸ் மா அதிபர் எனும் ரீதியில் ஒரு போதும் தான் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கவில்லை என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் வெள்ளிக்கிழமை ( 22) தெரிவித்தார்.
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அது குறித்த நடவடிக்கைகளுக்காக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உள்ளிட்ட 6 உயர் பொலிஸ் அதிகாரிகளை வெள்ளிக்கிழமை (22) மனித உரிமைகள் ஆணைக் குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்தது.
பொலிஸ் மா அதிபர் , சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ( மத்திய மாகாணம்), பிரதிப் பொலிஸ் மா அதிபர் ( மத்திய மாகாணம்), கேகாலை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், மற்றும் ரம்புக்கனை, கேகாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளையே, வெள்ளிக்கிழமை (22) முற்பகல் 11.00 மணிக்கு இவ்வாறு ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதன்படி முற்பகல் 11.00 மணிக்கு பம்பலபிட்டியில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்னவுடன் பொலிஸ் மா அதிபர் ஆஜரானார். அத்துடன் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் இதன்போது பிரசன்னமானார்.
இந் நிலையிலேயே இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு பொலிஸ் மா அதிபரிடம் சுமார் இரு மணி நேரம் விசாரணைகளை நடத்தியது. இதன்போதே, பொது மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த எந்த ஆலோசனைகளையும் தான் பொலிசாருக்கு வழங்கவில்லையென அவர் குறிப்பிட்டார்.
ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நால்வர் அடங்கிய விசேட குழுவொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நியமித்தது.
சுலாரி லியனகம, மேனகா ஹேரத், லால் வீரசிங்க மற்றும் ஏ.எஸ். நிலந்த ஆகியோர் கொண்ட குழுவே இவ்வாறு நியமிக்கப்பட்டது. அவர்கள் ரம்புக்கனையில் விசாரணைகளை ஆரம்பித்த நிலையிலேயே, அதன் தொடர்ச்சியான விசாரணைகளுக்காக இந்த பொலிஸ் உயர் அதிகாரிகளையும் அழைத்திருந்தனர். இன்று மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டுமே இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM