(ஏ.என்.ஐ)
கடந்த ஏப்ரல் 16 திகதி உத்தியோகப்பூர்வ தகவலின் பிரகாரம் , வெளிநாட்டு நபருக்கு உளவு பார்த்ததற்காகவும், சட்டவிரோதமாக அரச இரகசியங்களை வழங்கியதற்காகவும் சீன புகைப்படக் கலைஞருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சீன நாட்டு புகைப்படப்பிடிப்பாளர் 'வீஷெட்' செயலி மூலம் வெளிநாட்டு நபரான 'சகோதரி குய்' என்பவருடன் நட்பு கொண்டுள்ளார்.
இராணுவ துறைமுகங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தொடர்பான 384 புகைப்படங்களை வழங்கியுள்ளார்.
இதற்காக 40,000 யுவானுக்கும் அதிகமான ஊதியம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'சகோதரி குய்' என்ற வெளிநாட்டு தொடர்பின் அறிவுறுத்தலின் கீழ், 2019 ஜூலை மற்றும் 2020 மே வரையிலான காலப்பகுதியில் இராணுவ துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் திருமண புகைப்படங்களை எடுப்பதை போன்று அப்பகுதியில் புகைப்படங்பளை எடுத்துள்ளார்.
இராணுவத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள விரிகுடாவின் பரந்த-கோணக் காட்சிகளையே இதன் போது எடுத்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்களில் இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் பல இருந்துள்ளன. இவற்றை வெளிநாட்டு நட்பிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனடிப்படையில் குறித்த நபருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 5 ஆண்டுகள் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM