எரிபொருள் விலை அதிகரிப்பு சட்ட விரோதமானது - ஹர்ஷ டி சில்வா

Published By: Digital Desk 4

22 Apr, 2022 | 06:36 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நிதி அமைச்சரின் அனுமதி இல்லாமலே எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் எரிபொருள் விலை அதிகரிப்பு சட்ட விராேதமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

துறைமுகநகர் திட்டம் முழுமையடைந்த பின்னர் இலங்கையர்களுக்கு பயணத்தடை  விதிப்பதா?: ஹர்ஷ டி சில்வா | Virakesari.lk

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இன்று ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்படுகையுலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சட்டத்தின் பிரகாரம் நிதி அமைச்சரின் அனுமதி இல்லாமல் எரிபொருட்களின் விலை அதிகரிக்க முடியாது.

ஆனால் கடந்த 17ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டும்போது நிதி அமைச்சர் நாட்டில் இருக்கவில்லை. அவருக்கு பதில் அமைச்சராக யாரும் நியமிக்கப்பட்டும் இருக்கவில்லை. அப்படியானால் எவ்வாறு விலை அதிகரிக்க முடியும் என கேட்கின்றேன் என்றார்.

இதற்கு மின் சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேகர பதிலளிக்கையில், எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன்.

அதேநேரம் நிதி அமைச்சருக்கும் தொலை பேசி ஊடாக அறிவுறுத்தினோம். எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கும் இதுதொடர்பாக அறிவுறுத்தி இருந்தோம். 

ஜனாதிபதி, நிதி அமைச்சர், எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அனுமதியுடனே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான தொலை பேசி குரல் பதிவு உட்பட அனைத்து பதிவுகளும் இருக்கின்றன என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்த ஹர்ஷடி சில்வா, தொலைபேசி, குறுஞ்செய்தி ஊடாக சட்டம் அமைக்க முடியாது. ஏனெனில் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கின்றது.

ஜனாதிபதிக்கு நிதி அதிகாரம் இல்லை. எரிபொருள் விலை அதிகரிப்பு செய்வதற்கு நிதி அமைச்சர் அல்லது பிரதி அமைச்சரின் அனுமதி இருக்கவேண்டும். பிரதி நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. பதில் நிதி அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்படவில்லை. 

அப்படியாயின் எரிபொருள் விலை அதிகரிப்பு சட்டவிராேதம். சட்டத்துக்கு விரோதமாகவே விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது, அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதிக்கு நிதி அதிகாரம் இல்லை,

எனவே 17ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்க நிதி அமைச்சரின் அனுமதி பெற்றிருந்தால், அதுதொடர்பான அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்றார்.

இதற்கு சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பதிலளிக்கையில், நிதி அமைச்சரின் அனுமதியை சபைக்கு நாங்கள் சமர்ப்பிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22