மலேரியா காய்ச்சலின் அறிகுறி தென்படும் நபர்கள், மலேரியா பாதிப்பு உள்ள நாடுகளுக்கு பயணம் செய்திருந்தால் அதை மருத்துவர் ஆலோசகர், தேசிய வைத்தியசாலை மற்றும் மருத்துவப் பயிற்சியாளரிடம் தெரிவிக்கத் தயங்கக் கூடாது என கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்தியர் டி.ஆர்.உபுல் திசாநாயக்க தெரிவித்தார்.
தற்போது வைத்தியசாலைகளில் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவு பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
மேற்கு ஆப்பிரிக்காவிற்கு விஜயம் செய்த நபர்களே மலேரியா நோயினால் பாதிப்புக்குள்ளானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் மலேரியாவின் அறிகுறி தோன்றினால் நோயாளி வெளிநாட்டிற்குச் சென்றதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அதனை தொடர்ந்து நோயினால் பாதிக்கப்பட்ட நபரிடம் மலேரியா தொற்றுக்குள்ளான நாட்டிற்கு பயணம் செய்தாரா என்று மருத்துவர்கள் கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து பொது சுகாதார துணை இயக்குனர் வைத்தியர். எம் அர்னால்ட் கூறுகையில், இலங்கையில் மலேரியா ஒட்டுண்ணியை ஒழித்த போதிலும், மலேரியா நுளம்பு இன்னும் காணப்படுகின்றது என்றார்.
இது தொடர்பில் மலேரியா எதிர்ப்பு பிரசாரத்தின் இயக்குனர் பிரசாத் ரணவீர கூறுகையில், 2021 ஆண்டு முதல் இதுவரை 26 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த ஆண்டின் ஏப்ரல் இரண்டாவது வார இறுதியில் 16 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாட்டில் அனோபிலிஸ் மலேரியா நுளம்புகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது அவை விரைவாக நோயை பரப்புப்புவதற்கு உதவுகின்றன என அவர் எச்சரித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM