வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் இளைஞரொருவர் கொழும்பு – முகத்துவாரம், புளுமெண்டல் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
புளுமெண்டல் - மாதம்பிட்டி வீதிக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த நபர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றைச் சேர்ந்தவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று (21) அளுத்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
புளுமெண்டல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM