உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறுதினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த தருணம் இலங்கையிலும் கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடுவதற்காக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதேபோன்றதொரு 21 ஆம் திகதியில் ஆலயங்களில் திருப்பலியில் பங்கேற்றனர்.
அன்றையதினம் காலை 8.45 மணியளவில் எவருமே எதிர்பார்த்திராத சம்பவம் இலங்கையில் நடந்தேறியது. அன்றையதினம் இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகிற்குமே கறுப்பு நாளாக அமைந்தது.
அமைதி தேடி ஆலயங்களுக்குச் சென்றவர்கள் ஆலயத்திலிருந்து அழுகுரல்களுடன் ஓடினர், எங்கும் இரத்த வெள்ளம், மனித உடற்பாகங்கள் சிதறிக் கிடந்தன.
இலங்கையில் மதத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒரு குழு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதல்களில் 45 வெளிநாட்டவர்கள் உட்பட 269 உயிர்கள் பலியெடுக்கப்பட்டதுடன் பலர் காயமடைந்த நிலையில் தற்போதும் அவர்களில் சிலர் ஊனமடைந்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதிகோரி கடந்த 3 வருடங்களாக பல்வேறு தரப்பினரும் குரல்கொடுத்து வரும் நிலையில் இதுவரை நீதி கிடைக்கவில்லை.
நீதிக்கான போராட்டங்களும் கடந்த 3 ஆண்டுகளாக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டன. தற்போதும் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறும் மக்கள் எழுச்சிப்போராட்டத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
இன்று உயிர்த்த ஞாயிறுதின தற்கொலைத் தாக்குதலின் 3 ஆண்டு நினைவு கூரல் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று (21) இடம்பெற்றது.
இதில் “ உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு அப்பால் பாரதூரமான அரசியல் சதி இருப்பதாக சந்தேகிக்கின்றோம். அதன் காரணமாகவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் அரசாங்கமும் சட்டமா அதிபர் திணைக்களமும் பின்வாங்குகின்றன” என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆணித்தரமாக தெரிவித்தார்.
எவ்வாறு இருப்பினும் உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதலுக்கு நீதி வழங்குவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நீதியை பெற்றுக்கொடுப்பதில் பின்வாங்குகின்றதை நோக்கும் போது பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் இன்றைய கருத்துடன் உடன்பாடு உள்ளதாகவே தோன்றுகின்றது.
எத்தனை காலங்கள் கடந்தாலும் நீதியே வெல்லும் !
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM