(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
ரம்புக்கனை சம்பவம் தொடர்பிலான சி.சி.டி.வி காணொளிகளை முழுமையாக ஊடகங்களில் பகிரங்கப்படுத்த உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தமாறு நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் ஹரீன் பெர்னான்டோ ஆகியோர் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்கள்.
பாராளுமன்றில் புதன்கிழமை (20) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது ரம்புக்கனை சம்பவம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுப்படும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ரம்புக்களை சம்பவம் கண்டிக்கதாக காணப்படுகிறது.
சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு காணொளிகள் வெளியாகியுள்ளன.
வாகனங்களுக்கு பொலிஸார் தீ வைத்ததாக ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள், பிறிதொரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தீ வைத்தார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
குறித்த சம்பவத்தின் பொறுப்பினை ஆளும் தரப்பினரும் எதிர்தரப்பினரும் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்வதால் எவ்வித பயனும் கிடைக்கப்பெறாது.அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படுவது அவசியமாகும்.
ரம்புக்கனை சம்பவம் தொடர்பிலான அனைத்து சி.சி.டி.வி காணொளிகளை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதை உரிய தரப்பினருக்கு அறிவுறுத்துங்கள்.
போராட்டத்தில் ஈடுப்படும் மக்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தில் ஈடுப்படுவது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
காலை 08.20 மணிக்கு எரிபொருள் பௌசர் புறப்பட்டதாக பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டார் அவ்வாறாயின் சி.சி.டி.வி காணொளிகளை ஊடகங்களில் பகிரங்கப்படுத்த முடியுமா என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவிடம் கேள்வியெழுப்பினார்.
குறித்த சி.சி.சி.டி காணொளிகளை பகிரங்கப்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சபையில் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM