ரம்புக்கனையில் ஆரப்பட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார் அதன்பின்னர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மேலும் 2 பேர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக இன்று காலை முதல் ரம்புக்கனை பகுதியில் ரயில் கடவையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் ஆர்ப்பாட்டம் மேலும் தீவிரமடைந்த நிலையில் பொலிஸார் கண்ணீர்ப்புகைப்பிரயோகத்தை இன்று மாலை மேற்கொண்டுள்ளனர்.
இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பௌசருக்கு தீவைக்க நெருக்கிய வேளை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM