மட்டு வவுணதீவில் புதையல் தோண்டிய 4 பேர் கைது - ஒருவர் தப்பியோட்டம்  

Published By: Digital Desk 4

19 Apr, 2022 | 01:12 PM
image

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள இரட்டைச்சோலைமடு பிரதேசத்தில் பண்ணை ஒன்றில்  புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட பகுதியை பொலிசார் நேற்று திங்கட்கிழமை (18) மாலை முற்றுகையிட்ட போது  4 பேரை கைது செய்துள்ளதுடன் ஒருவர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது  புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய துளையிடும் கருவி உட்பட உபகரணங்களை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வவுணதீவு பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசாருடன் விசேட புலனாய்வு பிரிவினரும் இணைந்து சம்பவதினமான நேற்று மாலை குறித்த பண்ணை பகுதியை முற்றுகையிட்டனர்.

இதன்போது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் தப்பி ஓடியதுடன் 4 பேரை கைது செய்தனர் இவர்களிடமிருந்து துளையிடும் கருவி மற்றம் மின் உபகரணங்களை மீட்டனர். 

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 28 ,55,48, 43, வயதுடையவர்கள் எனவும் இவர்கள் அம்பாறை மத்தியமுகாம் 11ஆம் கொலனி,  மட்டு புதுக்குடியிருப்பு, வவுணதீவு கண்ணகிபுரம், போரதீவு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தப்பி ஓடிய பிரதான சூத்திரதாரி கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த எனவும் இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44