(எஸ்.ஜே.பிரசாத்)
2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் கால்பந்தாட்டத் தொடருக்கான இறுதி தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில் அடுத்த மாதம் முதல் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளது.
அணியில் சிறந்த வீரர்கள் மற்றும் புதிய வீரர்கள் அழைக்கப்பட்டு வருவதுடன், இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான போட்டியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 17 வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
ஆசியக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் மூன்றாவது சுற்றில் இலங்கை பங்கேற்கும் இரண்டு போட்டிகள் ஜூன் 8ஆம் திகதி முதல் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
ஆசியக் கிண்ணத் தொடருக்கான மூன்றாவது சுற்றுக்கு 30 நாடுகள் ஆறு குழுக்களாகப் போட்டியிடுகின்றன. இதை உஸ்பெகிஸ்தான் உட்பட ஆறு நாடுகள் நடத்துகின்றன.
மூன்றாவது சுற்றில் இலங்கையைச் சந்திக்கும் உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து மற்றும் மாலைத்தீவுகள் ஆகிய அணிகள் சமீபத்தில் கால்பந்தாட்ட தரவரிசையில் முறையே 83, 111 மற்றும் 156ஆவது இடங்களில் உள்ளன.
இலங்கை தற்போது உலக தரவரிசையில் 205ஆவது இடத்திலும், ஆசிய தரவரிசையில் 45ஆவது இடத்திலும் உள்ளது. ஆசிய தரவரிசையில் குவாம் கடைசி இடத்தில் (46ஆவது) உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM