(நா.தனுஜா)
ஸ்டான்ட் அன்ட் புவர்ஸ் நிறுவனமானது இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணயத்தின் தரத்தை 'சிசிசி' நிலையிலிருந்து 'சிசி' நிலைக்குத் தரமிறக்கியிருப்பதுடன், நீண்டகால உள்நாட்டு நாணயத்தின் தரத்தை 'சிசிசி' நிலையிலிருந்து 'சிசிசி -' நிலைக்குத் தரமிறக்கியுள்ளது.
அதேவேளை குறுங்கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தின் தரம் 'சி' நிலையிலேயே மீண்டும் இருப்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியிருப்பதுடன், பரிமாற்று மற்றும் நாணயமாற்று மதிப்பீட்டை 'சிசிசி' நிலையிலிருந்து 'சிசி' நிலைக்குத் தரமிறக்கியுள்ளது.
இவற்றின் தரப்படுத்தலில் வெளிப்பட்டுள்ள நேர்மறையான போக்கு, இலங்கையின் பொருளாதாரம் வர்த்தகக்கடன் மீள்செலுத்துகையில் அச்சுறுத்தலான மட்டத்தில் இருப்பதைக் காண்பிப்பதாக ஸ்டான்ட் அன்ட் புவர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெருமளவான வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்தவேண்டியுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாகக் கடந்த 12 ஆம் திகதி அரசாங்கம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM