(எம்.மனோசித்ரா)
ஐ.ஓ.சி. நிறுவனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மீண்டும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதற்கமைய பெற்றோல் விலை 35 ரூபாவினாலும் , டீசல் விலை 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் ஐ.ஓ.சி. நிறுவனம் ஐந்தாவது முறையாக இவ்வாறு எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஐ.ஓ.சி. நிறுவனம் பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 50 ரூபாவினாலும், டீசல் லீற்றரொன்றின் விலையை 75 ரூபாவினாலும் அதிகரித்திருந்தது. விலை அதிகரிப்பிற்கமைய ஒக்டேன் 95 ரக பெற்றோல் 283 ரூபாவிற்கும் , யூரோ 3 பெற்றோல் லீற்றரொன்றின் விலை 263 ரூபாவிற்கும், டீசல் 214 ரூபாவிற்கும், சுப்பர் டீசல் 249 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனையடுத்து மார்ச் 12 ஆம் திகதி முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை 77 ரூபாவினாலும் , ஒக்டேன் 95 பெற்றோலின் விலை 76 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலையை 55 ரூபாவினாலும் , சுப்பர் டீசலின் விலையை 95 ரூபாவினாலும் அதிகரித்தது.
கடந்த கால விலை அதிகரிப்புக்களின் பின்னர் ஐ.ஓ.சி. நிறுவனம் ஒக்டேன் 92 பெற்றோலினை 338 ரூபாவிற்கும் , சிபெட்கோ நிறுவனம் 254 ரூபாவிற்கும் விற்பனை செய்தன. இதே போன்று ஒக்டேன் 95 பெற்றோலினை ஐ.ஓ.சி. நிறுவனம் 367 ரூபாவிற்கும் , சிபெட்கோ 283 ரூபாவிற்கும் விற்பனை செய்தன.
மேலும் ஒட்டோ டீசலை ஐ.ஓ.சி. நிறுவனம் 289 ரூபாவிற்கும் , சிபெட்கோ 276 ரூபாவிற்கும் , சுப்பர் டீசலை ஐ.ஓ.சி. நிறுவனம் 327 ரூபாவிற்கும் , சிபெட்கோ 254 ரூபாவிற்கும் விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM