-சி.அ.யோதிலிங்கம்-
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் நம்பிக்கையில்லாப்பிரேரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாறாளுமன்றஉறுப்பினர்கள் இருவரும் தாங்களாகவே எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்திற்குசென்று கையொப்பமிட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் கையெழுத்திடவில்லை. விக்னேஸ்வரனும்,கையெழுத்திடவில்லைரூபவ் மலையக முஸ்லிம் கட்சிகளும் இதுவரை கையெழுத்திட்டதாகவில்லை.
ஏனையஎதிர் முகாமிலுள்ள சிங்களக் கட்சிகள் பலவும்; கூட இன்னமும் கையெழுத்திடவில்லை.இந்நிலையில் தீவிர தமிழ்த் தேசியம் பேசும் முன்னணியினர் தாமாகவேஎதிர்க்கட்சிக் காரியாலயத்திற்குச்சென்று பிரேரணையில் கையொப்பமிட்டமையானது அவர்களது இரு தேசக் கோட்பாட்டை சஜித்பிரேமதாசஅங்கீகரித்து விட்டாரோ? என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. ராஜபக்ஷக்களைவீழ்த்தி பிரேமதாசக்களுக்கு முடி சூட்டுவதற்காகத்தான் தமிழ் மக்கள்முன்னணியினருக்கு வாக்களித்தார்களோ? என்ற கேள்வியையும்மேலெழுப்பியுள்ளது.
முன்னணியினரின் இந்த அணுகுமுறையில் கோட்பாட்டுத் தவறுகளும்ரூபவ்இராஜதந்திரதவறுகளும் உள்ளன. கோட்பாட்டு ரீதியாக சஜித் அணி கோட்டா அணி இரண்டுமேபெருந்தேசியவாதக் கட்சிகள். ஓன்று பெருந்தேசியவாதத்தின் இனவாத முகம்.
அதுவரலாற்று ரீதியாக தமிழ் மக்களின் முதுகில் குத்தியது. மற்றையது நெஞ்சில்குத்தியது. எனவே இரண்டு அணிகளும் தமிழ் மக்களின் நட்புசக்திகள் அல்ல.
ஆகவேஇத்தரப்புகளுடனான எந்த உறவுகளும் நிபந்தனைகளின் அடிப்படையிலானதாகவே இருக்கவேண்டும்.
இந்த உண்மையை சரிவர புரிந்து கொள்ளாததனால் தான் நல்லாட்சிக் காலத்தில்ரணில் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து கூட்டமைப்பு வெறுங்கையுடன் திரும்பியது.
அதுமட்டுமன்றி தேர்தலில் பின்னடைவுக்குச் சென்றதோடு தென்னிலங்கைக் கட்சிகள்தமிழர் தாயகத்தில் ஊடுருவுவதற்கும் காரணமாகியது. அதன் வழி தமிழ்த் தேசியஅரசியலையும் பலவீனமாக்கியது.
2
இரண்டாவது தற்போது இலங்கை அரசு பொருளாதார ரீதியாக அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம்நாட்டில் நீண்ட காலமாக நிலவிவரும் இனப்பிரச்சினையே. ஏனையவை எல்லாம் துணைக்காரணிகள்.
பெருந்தொகைக் கடன்களை பெறவேண்டிய நிலையும்ரூபவ் நாட்டின்கொள்ளளவுக்கு மேலாக அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தை வைத்து கட்டி அழ வேண்டியநிலையும் இனப்பிரச்சினையினாலேயே ஏற்பட்டது.
மறுபக்கத்தில் நாட்டில் ஸ்திரத்தன்மை பேணப்பட வேண்டும் என்று சர்வதேச சக்திகள்வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. இதன் அர்த்தமும் இனப்பிரச்சினை தீர்க்கப்படல்வேண்டும் என்பதேயாகும் இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் இலங்கையர் என்றஅடையாளத்தை கட்டியெழுப்ப முடியாது.
இவ்வடையாளம் கட்டியெழுப்பப்படாமல் முழுஇலங்கையும் ஒரே இலக்கில் பயணித்து பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்து விடமுடியாது.
எனவே தற்போதைய காலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஒருங்கிணைத்துமுன்வைத்து பேரம் பேசல் வேண்டிய காலம். இந்தக்காலத்தை தவற விட்டால் பிறிதொருவாய்ப்பான காலத்திற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டி வரும். தமிழ்த் தேசியக்கட்சிகள் தனித்தனியாகக் கையாண்டு வலுவான பேரம் பேச்சு நடாத்த முடியாது.
கூட்டாககையாள்வதன் மூலமே முன்னேற்றங்களைக் காண முடியும். இங்கே தமிழ்த் தேசியக்கட்சிகள் கூட போதுமானது எனக் கூறி விட முடியாது. தமிழ்த் தேசமாக அணுகுவது தான்அவசியம்ஒரு பக்கத்தில் நிரந்தரத்தீர்வுக்கான பேச்சு வார்த்தையை நடாத்திக் கொண்டுஇன்னோர் பக்கத்தில் இடைக்கால நிர்வாகத்தைப் பெற்று மக்களின் நலன்களைப்பாதுகாக்க முன்வருவதே இன்றைய காலத்தில் ஆரோக்கியமானதாக இருக்கும்.
அரசியல்தீர்வு வரும்வரை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட நெருக்கடிகளைபொறுத்துக்கொண்டிருக்க முடியாது. ஆக்கிரமிப்புப் பிரச்சினைரூபவ் பொருளாதாரநெருக்கடியால் வரும் வறுமைப் பிரச்சினைரூபவ் என்பவற்றை முகங்கொள்வதற்கு இடைக்காலநிர்வாகம் அவசியம்.‘தமிழ் மக்களுக்கென ஒரு இடைக்கால நிர்வாகம் இருந்தால்’ புலம்பெயர் மக்களும்நம்பிக்கைகளுடன் முதலிட முன்வருவர். தமிழ் நாட்டின் முதலீட்டாளர்களையும் தமிழர்தாயகத்தில் முதலிடும்படி ஊக்குவிக்கலாம்.
3
இடைக்கால நிர்வாகம் மூலம் அரசியல் கைதிகளின் விடுதலை அவர்களுக்கானவாழ்வாதரங்களை உருவாக்கல்ரூபவ் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நலன்கள்என்பவற்றிலும் முன்னேற்றங்களைக் காண முடியும்.
அரசியல் தீர்வுப்பிரச்சினை அரசியல் யாப்புப் பிரச்சினையாகவும் இருப்பதால் அதனைநடைமுறைப்படுத்த கால தாமதங்கள் ஏற்படும்ஆனால் இடைக்கால நிர்வாகத்தைஜனாதிபதியின் அதிகாரங்களைக் கொண்டோ அல்லது பாராளுமன்றச் சட்டம்மூலமோ உருவாக்க முடியும்.
இவையெல்லாவற்றிற்கும் முன் நிபந்தனையாக இருப்பது உறுதியான அரசியல்நிலைப்பாடும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுமே! தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் ஒருதலைப்பட்டசமான செயற்பாடு இந்த அணுகுமுறையை முழுமையாகக்குழப்பியுள்ளது.
சிங்கள தேசத்தின் இரண்டு அணிகளையும் கையாளும்போது தந்திரோபாயஅணுகுமுறைகளும் அவசியமானதாகும். அதில் முதலாவது இரண்டு அணிகளிலிருந்தும்சமதூரத்தில் நிற்பதாகும்.
ஒரு அணி பக்கம் சார்பு நிலையை எடுத்தால் மற்றையஅணியைக் கையாள்வதில் நெருக்கடியைச் சந்திக்க வேண்டிவரும்.
இரண்டாவது கோட்டா அணி இனப்படுகொலையின் உச்சமானஉயிர்ப்படுகொலையைச் செய்த கட்சி அதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய கடமைஉண்டு.
எனவே அந்த அணிக்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களினுடைய அரசியல்தீர்வை நோக்கி நகர்வதே அதிகம் பொருத்தமானதாக இருக்கும்.
தவிர கோட்டா அணி பெருந்தேசியவாதத்தின் இனவாத அணி தமிழ் மக்களின்ஆதரவு அதற்கு பெரிதாக இல்லை. சஜித் அணி பெருந்தேசியவாதத்தின் லிபரல்அணி.
இது தமிழ் மக்களின் ஆதரவினை கணிசமான அளவில் பெற்ற அணி.தென்னிலங்கைளில் வாழும் தமிழ் மக்கள் இதற்கே ஆதரவு வழங்கி வருகின்றனர்.ஜனாதிபதி தேர்தல்களில் வட – கிழக்கு மக்களும் ஆதரவு வழங்கியிருந்தனர்.
எனவே கோட்டா அணி ஒரு தீர்வைக் கொண்டு வருமானால் இந்த அணி தனதுஎதிர்ப்பை அடக்கி வாசிக்கும். சந்திரிக்காவின் தீர்வு யோசனையை ரணில்எதிர்த்த போதும் பண்டா-செல்வா ஒப்பந்தத்தை ஜே.ஆர் எதிர்த்தபோதும் இருந்தசூழல் இன்று குறைவு.
மாறாக சஜித் அணி தீர்வைக் கொண்டு வந்தால் கோட்டா அணிநிச்சயம் குழப்பும். நல்லாட்சிக்காலத்தில் அதுவே நடந்தது. எனவே இந்த வகையில்
4
பார்த்தாலும் கோட்டா அணி மூலம் தீர்வுக்கு முயற்சிப்பதே அதிகம்பொருத்தமானதாக இருக்கும்.எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக் கோட்பாட்டு அடிப்படையிலும்,தந்திரோபாய அடிப்படையிலும் மாபெரும் தவறுகளைச் செய்துள்ளது.
இது தேர்தல்அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் மெல்ல மெல்ல கொள்கை அரசியலை கீழிறக்கிவிடுவார்கள் என்ற சந்தேகத்தையும் கிளப்பிவிட்டிருக்கின்றது.
நல்லாட்சிக் காலத்தில் கூட்டமைப்பு ரணில் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கும்முயற்சியில் இறங்கி வெறும் கையுடன் திரும்பிவந்தது. அதேபோல தமிழ்த்தேசியமக்கள் முன்னணியும் சஜித்துக்கு முட்டுக்கொடுக்கப் போய் வெறும்கையுடன்திரும்பிவரப் போகின்றதா?
தற்போது சிங்கள மக்கள் தாம் தெரிவுசெய்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தைநடாத்துகின்றனர். அதுவும் சிங்கள நடுத்தர வர்க்கமும், நகர்ப்புற வர்க்கமும்மட்டுமே களத்திலுள்ளது. கிராமப்புற மக்கள் இன்னமும் களத்திற்கு வரவில்லை.
இப்போராட்டத்தின் ஒரு பகுதிதான் நம்பிக்கையில்hப் பிரேரணை. தமிழ்மக்களின் பிரச்சினை அரசாங்கத்தை மாற்றுவது அல்ல அதற்காக முண்டியடிக்கவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM