அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரத்தின் ஊடாக ஹட்டன் செல்லும் பிரதான பாதையில் கல்மதுரை தோட்ட மார்க்கத்தில் உள்ள பாலம் வெடிப்புற்று காணப்படுவதுடன் இப்பாலத்தில் பொருத்தபட்டிருந்த பாதுகாப்பு கம்பிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. இப்பாலத்தின் ஊடாக கனரக வாகனங்கள் அரச மற்றும் தனியார் பஸ் சேவை இடம்பெறுகின்றது.
இப்பாதை 2007 ஆம் ஆண்டு மத்திய மாகாண வீதி அதிகார சபையால் காபட் பாதையாக புணரமைக்கபட்டது. இதன் போது இப்பாலம் புனரமைக்கபடாமல் கைவிடப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இப்பாலத்தினை புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் மலையக அரசியல் வாதிகளிடம் தெரிவித்தபோதும் இதுவரை எவறும் நடவடிக்கை எடுக்கவில்லையென இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் இடம்பெறும் வாகன விபத்துகள் தொடர்பாக அக்கரபத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தசிரியிடம் வினவியபோது, இப்பாலத்தில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெறுகின்றது. இதனால் வாகனங்கள் சேதமடைவதுடன் வாகனங்களில் செல்லும் பயணிகளும் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இப்பாலத்தில் காணப்படும் குறைப்பாடுகளை மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள். இதுதொடர்பாக நாங்களும் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக இவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM